பிஜிங்: உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவான் கூறுகையில், 'உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா 32 கோடி டாலர்கள் நிதி அளித்து வந்தது. இந்நிலையில், கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீன அரசும், மக்களும் உலக சுகாதார நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டும் விதத்தில், இந்த கூடுதல் நிதி அளிக்கப்படுகிறது' என்றார்.